search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளைச்சல் குறைவு"

    • வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது.
    • கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை குறையாது.

    திருச்சி:

    தமிழகத்தில் கோடை வெயில் அனல் பறக்கிறது. இதில் உடல் வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது. நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், லெமன் டீ போன்ற வற்றுக்கு எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இது எளிய மக்களின் தேர்வாகவும் எலு மிச்சை உள்ளது. தற்போது இதன் தேவை அதிகரித்து விளைச்சல் குறைந்துள்ள காரணத்தினால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    பெரம்பலூரில் எலு மிச்சை பழங்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.2-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது விலை உயர்ந்து முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.8-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து எலுமிச்சை பழம் விற்பனை செய்யும் வியாபா ரிகள் கூறுகையில், பெரம்ப லூருக்கு அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் இருந்து எலுமிச்சை பழம் விற்ப னைக்கு வருகிறது. வெயில் காலத்திற்கு முன்பு குறைந்த விலையில் விற்பனை செய் யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கோடை வெயி லினால் வரத்து குறைவாலும், தேவை அதிகமானதாலும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூரில் எண் ணிக்கை அடிப்படையில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்றனர்.

    மணப்பாறை காமராஜர் மார்க்கெட் காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நாகூர் கனி கூறியதாவது:-

    மணப்பாறை காமராஜர் மார்க்கெட்டுக்கு வையம் பட்டி, துவரங்குறிச்சி, விராலி மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

     தினமும் இங்கு 200 மூட்டை எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஒரு மூட்டை 50 கிலோ எடை இருக்கும். இங்கு வரும் 200 முட்டை எலுமிச்சை பழங்க ளில் 80 சதவீதம் உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது.

    மீதமுள்ளவை ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதி களில் கடும் வறட்சி நிலவி வருவதால் விளைச்சல் சரிந்து உள்ளது. ஆகவே மார்க்கெட் டுக்கு 50, 60 மூட்டை எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகின்றது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மூட்டை எலு மிச்சை பழம் ரூ. 2000 முதல் 2500க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 7000 வரை ஏலம் போகிறது. இதனால் சில்லறை கடைக ளில் ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 12 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நன்னாரி சர்பத்தின் விலையும் பல இடங்களில் 20 லிருந்து ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.

    ×